ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்திற்கு அன்றாட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார்கள் குறித்து மனு அளிக்க வந்த வண்ணம் உள்ளனர். அவர்களின் பயன்பாட்டிற்காக தாலுகா அலுவலகத்தின் பின்புறம் பொது கழிப்பறை கட்டப்பட்டுள்ள நிலையில் அவை பல மாதங்களாக பயன்பாடு இன்றி காணப்படுகின்றது. அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.