போடியை சேர்ந்தவர் ஐயப்பன் (45). இவர் தேனியில் வேலை பார்த்து வரும் நிலையில் நேற்று முன்தினம் வேலை முடித்து வீட்டிற்கு செல்வதாக அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது இவருக்கு பின்னால் மனோ ரஞ்சித் என்பவர் ஓட்டி வந்த கார் இவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து தேனி போலீசார் (மே.23) விசாரணை.