சனி மகா பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் கூட்டம்
மதுரையில் சனி மகா பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;
மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் 24.05.2025 சனிக்கிழமை சனி மஹா பிரதோசத்தை முன்னிட்டு இன்று (மே.24) மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று அதன் பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.