கேரட் அலங்காரத்தில் ஆதி சிவன்.
மதுரை தவிடுச்சந்தை பகுதியில் உள்ள ஆதி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது;
மதுரை தவிட்டுச்சந்தை பந்தடி 5வது தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி சிவன் கோவிலில் இன்று (மே.24) மாலை சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு ஆதி சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கேரட்டினால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆதி சிவனை வழிபட்டனர். வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.