சங்கராபுரத்தில் அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் அ.தி.மு.க., அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். பேரூராட்சி பேரவை செயலாளர் ராஜமாணிக்கம் வரவேற்றார். நகர செயலாளர் நாராயணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் அரசு இறந்தேவன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் முன்னாள் அமைச்சர் மோகன் அ.தி.மு.க., அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.