வடலூர்: பள்ளி தாளாளரை சந்தித்த அமைச்சர்

வடலூர் பள்ளி தாளாளரை அமைச்சர் எம்ஆர்கே சந்தித்தார்.;

Update: 2025-05-25 17:30 GMT
கடலூர் மாவட்டம் வடலூர் ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் 80வது சதய விழாவை முன்னிட்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இந்நிகழ்வில் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் தமிழ்செல்வன் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

Similar News