விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது
திண்டுக்கல் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது;
திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தாடிக்கொம்பு, அழகுசமுத்திரப்பட்டி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தாடிக்கொம்பு அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சௌந்தரபெருமாள் மகன் மணிகண்டன்(24) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.