திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு வடக்கன்குளம் சாலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வாகனங்கள் சீராக செல்ல வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து தற்பொழுது புதியதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.