கள்ளக்குறிச்சி அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்கும் வகையில் மின்வாரியத்துறை சார்பில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 21ம் தேதி மின்மாற்றியில் இருந்த, 340 லிட்., ஆயில் மற்றும் 140 கிலோ எடையுள்ள காப்பர் கம்பியை மர்மநபர்கள் திருடி சென்றனர். இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.