மாணவர்களை நேரில் சென்று பாராட்டிய சங்கம்
திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம்;
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவர்களுக்கு இன்று (மே 31) திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கத்தினர் மாணவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று விருது, கேடயம், பொன்னாடை,சந்தன மாலை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை திசையன்விளை கட்டிட பொறியாளர் சங்க தலைவர் ஆனந்தராஜ் செய்திருந்தார்.