கடலூர்: காவல் துறையில் பணி ஓய்வு
கடலூர் மாவட்டத்தில் காவல் துறையில் பணி ஓய்வு பெற்றனர்.;
கடலூர் மாவட்டம் காவல்துறையில் சிறப்புடன் பணியாற்றி 31. 05. 2025 தேதி பணிஓய்வு பெறும் ஆய்வாளர் R. தணிகாச்சலம், உதவி ஆய்வாளர்கள் P. K. முருகன், T. வெங்கடேசன், C. கிருஷ்ணமூர்த்தி, G. மணிவண்ணன், B. சாமிநாதன் மற்றும் P. ஜான்பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் A. ரகுமாறன், K. குமார், C. நாகராஜன், M. நடராஜன் N. மணிவேலன் ஆகியோர்களை கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்தும், சான்றிதழ் வழங்கியும் கௌரவித்தார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஒய்வு பெறும் நீங்கள் உடல் நலனை நன்றாக பேணிகாத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.