கரூரில் மாணவ - மாணவிகளுக்கு பாடநூல்கள் சீருடை வழங்கி வாழ்த்தினார் ஆட்சியர்.

கரூரில் மாணவ - மாணவிகளுக்கு பாடநூல்கள் சீருடை வழங்கி வாழ்த்தினார் ஆட்சியர்.;

Update: 2025-06-02 08:49 GMT
கரூரில் மாணவ - மாணவிகளுக்கு பாடநூல்கள் சீருடை வழங்கி வாழ்த்தினார் ஆட்சியர். கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில்,பள்ளிக் கல்வித் துறை சார்பில் பாடநூல்கள் சீருடைகள் மற்றும் மாணவ - மாணவிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் துவங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கரூர் மாநகராட்சி குமரன் உயர்நிலைப் பள்ளியில் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்கான பாடநூல், சீருடை, பேனா, பென்சில், ஷூ சாக்ஸ், புத்தகப் பை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி,பின்னர் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர்,மாநகராட்சி ஆணையர்,அரசு துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News