தா.பழூரில் விலையில்லா புத்தகம் மாணவர்களுக்கு வழங்கிய பள்ளி

தா .பழூர் அரசு பள்ளிகளில் விலையில்லா புத்தகம் நோட்டு பள்ளி சீருடை உள்ளிட்டவைகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ மாணவர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.;

Update: 2025-06-02 14:01 GMT
அரியலூர், ஜூன் 2 - சென்னை,திருவல்லிக்கேணி, லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் பள்ளிக் கல்வித் துறை சார்பில், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள்,சீருடைகள்,நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு வழங்கியதைத் தொடர்ந்து, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம்,தா.பழூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள்,சீருடைகள்,நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்கள் சந்திரலேகா,ஆனந்தி, தலைமை ஆசிரியர் பிளமன்ராஜ்,ஒன்றிய அவைத் தலைவர் எஸ்.சூசைராஜ், ஒன்றிய பொருளாளர் த.நாகராஜன், ஒன்றிய துணை செயலாளர் அ.இராஜேந்திரன்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ந.கார்த்திகைகுமரன் மற்றும் கழக தோழர்கள்,இருபால் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Similar News