வரதராஜன்பேட்டையில் விலையில்லா நோட்டு புக் மாணவர்களுக்கு வழங்கிய எம்எல்ஏ

வரதராஜன் பேட்டை தொன் போஸ்கோ பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புக் மற்றும் பள்ளிச் சீருடைகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணன் வழங்கினார்.;

Update: 2025-06-02 14:23 GMT
அரியலூர் ஜீன்.2- சென்னை,திருவல்லிக்கேணி, லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் பள்ளிக் கல்வித் துறை சார்பில், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள்,சீருடைகள்,நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு வழங்கியதைத் தொடர்ந்து, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில், 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள்,நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்.இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் அருள்திரு தாமஸ் லூயிஸ்,தலைமை ஆசிரியர் அருள்திரு பிரான்சீஸ் சேவியர், ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ரெங்க.முருகன், வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவர் மார்க்ரேட் அல்போன்ஸ்,துணைத் தலைவர் எட்வின் ஆர்தர் மற்றும் ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள்,வரதராஜன்பேட்டை பேரூர் கழக தோழர்கள்,இருபால் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Similar News