மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம்!
வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்து கொண்டார்.;
வேலூர் மாவட்டத்தில் இன்று ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கலியமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.