சங்கரன்கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக செயற்குழு கூட்டம்

விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக செயற்குழு கூட்டம்;

Update: 2025-06-05 07:03 GMT
திருச்சியில் வருகின்ற 14ஆம் தேதி நடைபெறுகின்ற மாபெரும் எழுச்சி பேரணி சம்பந்தமாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் விடுதலை சிறுத்தை கட்சியின் தென்காசி வடக்கு மாவட்ட சார்பாக நேற்று சங்கரன்கோவில் சமுதாய நலக்கூடத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மேலிட பொறுப்பாளர் அக்கா பாண்டியம்மா தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் லிங்கவளவன், வழக்கறிஞர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News