சோளிங்கர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்;

Update: 2025-06-06 06:35 GMT
சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சோளிங்கர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒட்டனேரியை சேர்ந்த சிலர் லாரியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் போலீசார் வருவதை கண்டதும் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். அதைத்தொடர்ந்து போலீசார் மணலுடன் லாரியை சோளிங்கர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

Similar News