குருவலப்பார்கோவில்,கிளை கழக அவைத்தலைவர் பாலுசாமி இல்லத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசனுக்கு மதிய உணவு விருந்து உபசரிப்பு

குருவலப்பார்கோவில்,கிளை கழக அவைத்தலைவர் பாலுசாமி இல்லத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசனுக்கு மதிய உணவு விருந்து உபசரிப்பு நடைபெற்றது.;

Update: 2025-06-18 14:36 GMT
அரியலூர், ஜூன்.18- குருவலப்பார்கோவில்,கிளை கழக அவைத்தலைவர் பாலுசாமி இல்லத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மதிய உணவு விருந்து உபசரிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, குருவலப்பார்கோவில்,கிளை கழக அவைத்தலைவர் பாலுசாமி இல்லத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இறுதியாக மதிய உணவு விருந்தினை முடித்துக் கொண்டார். விருந்து உபசரிப்பின் போது சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய செயலாளர் இரா.மணிமாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News