அரியலூர், தேளூர், உடைய பாளையம், செந்துறை, துணை மின் நிலையங்களில் பராமரிப்பு காரணமாக நாளை மின்தடை...
அரியலூர், தேளூர், உடைய பாளையம், செந்துறை, துணை மின் நிலையங்களில் பராமரிப்பு காரணமாக நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது...;
அரியலூர், ஜூன்.20- அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத், பள்ளகாவேரி, மாகலிங்கபுரம், அமினாபாத் ஒட்டகோவில், ஒ.கூத்தூர், பொய்யாதநல்லூர், கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, இராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளுர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கொளப்பாடி, மங்களம், குறுமஞ்சாவடி ஆகிய கிராமங்களிலும் தேளுர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளுர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாயக்கர்பாளையம், மயில்லாண்டகோட்டை ஆகிய கிராமங்களிலும் உடையார்பாளையம் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான உடையார்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ.தத்தனூர், நாச்சியார்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி, இடையார் ஆகிய கிராமங்களிலும் செந்துறை துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான இராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் ஆகிய கிராமங்களிலும் காலை 09.00 மணி முதல் 02:00 மணி வரை மின் விநியோகம் செய்ய இயலாது. குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பணி முடிக்கப்பட்டால் உடனடியாக மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.