சங்கரலிங்கபுரம் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்
கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் மெர்குரி விளக்கு அருகில் வயிலை பஞ்சாயத்து சங்கரலிங்கபுரம் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்துசாமி தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியா ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் காளியப்பன்,கிளைச் செயலாளர் கருப்பசாமி, துணை கிளை செயலாளர் பெரிய குருசாமி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.