தாராபுரம் அரசு பள்ளிக்கு வழங்கும் காலை உணவில் பல்லி நான்கு மாணவர்கள் மயக்கம் அமைச்சர் ஆய்வு
தாராபுரம் கொழிஞ்சிவாடி நடுநிலைப்பள்ளியில் சாம்பாரில் பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட நான்கு மாணவர்களுக்கு வாந்தி மயக்கம், அரசு மருத்துவமனையில் அனுமதி, பாதிக்கப்பட்ட மாணவர்களை மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நேரில் ஆறுதல் கூறி தேவையான சிகிச்சைக்கு உத்தரவு;
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எட்டாவது வார்டு கொழிஞ்சி வாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மொத்தம் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர் இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பள்ளியில் வழங்கப்படும் காலை உணவு சாப்பிட்டு வருகின்றனர், இவர்களுக்கான காலை உணவு ஒப்பந்ததாரர் ஒருவர் மூலம் காங்கேயத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தயாரிக்கப்பட்டு ஹாட் பாக்ஸ் ல் அடைக்கப்பட்டு மேல் மூலமாக ஒன்றிய பகுதி முழுவதுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது இதன்படி இன்று காலை வழங்கப்பட்ட உணவில் முதல் கட்டமாக 40 மாணவர்கள் உணவருந்த தயாராகி உள்ளனர் இவர்களில் முதல் கட்டமாக உணவருந்திய ஒரு மாணவருக்கு அவரது உணவில் ஊற்றப்பட்ட சாம்பாரில் இறந்து போன பல்லி கிடந்துள்ளது இதனை பார்த்ததும் உணவினை அருந்திய மாணவர்களில் 4 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பள்ளிகிலேயே மயங்கி விழுந்ததாகவும் தெரிய வந்ததை எடுத்து ஆசிரியர்கள் உடனடியாக கொழிஞ்சி வாடியைச் சேர்ந்த மாணவர் சரவணன் 11, சஞ்சித் 12, அமேஷ் 12, வீரராஜ் 12, ஆகிய நான்கு பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர், சம்பவம் பற்றி அறிந்ததும் மாணவர்களின் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டனர் இது குறித்து தகவல் அறிந்த தாராபுரம் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நகர சபை தலைவர் பாப்பு கண்ணன், நகரக் கழகச் செயலாளர் முருகானந்தம், உட்பட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட பலரும் அங்கு வந்து மாணவர்களை உடல் பரிசோதனை செய்தனர் பின்னர் மாணவர்கள் எந்தவித விளைவுகளும் இன்றி தங்களுக்கு உடல்நிலை பாதிப்பு இல்லை எனக் கூறியதை எடுத்து பரிசோதனை செய்த அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிறிது நேரம் ஓய்வு பெற்ற பின் மீண்டும் அவர்கள் பள்ளிக்குச் செல்லலாம் எனக் கூறியுள்ளனர், தனியார் ஒப்பந்ததாரரிடம் இருந்து தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட உணவில் பல்லி விழுந்த சம்பவம் மாணவர்கள் மயக்கமடைந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது