தென்காசியில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா்
திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா்;
தென்காசியில் மழைக் காலங்களில் பொதுமக்களை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. தென்காசி வடக்கு மாசிவீதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் தலைமை வகித்தாா். நகர துணைச் செயலா் ராம் துரை, மாவட்ட பிரதிநிதி மைதீன் பிச்சை, ஒன்றிய பொறுப்பாளா்கள் பொன்செல்வன், ஜேகே.ரமேஷ், மாவட்ட பொறியாளா் அணி தலைவா் தங்கபாண்டியன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் டிஆா்.கிருஷ்ணராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் அப்துல் ரஹீம், நகா்மன்ற உறுப்பினா் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனா். திமுக மாவட்ட பொறுப்பாளா் ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினாா். மாவட்ட அயலக துணை அமைப்பாளா் ராமராஜன்,இசக்கி ரவி, சன்ராஜா,செய்யதுஆபில் ,இப்ராகிம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.