ஊத்தங்கரை அருகே நகை பறித்த இரண்டு பேர் கைது.
ஊத்தங்கரை அருகே நகை பறித்த இரண்டு பேர் கைது.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சின்ன குன்னத்துார் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி சுஜாதா(42) இவர் ஊத்தங்கரையில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்வம் அன்று இரவு சின்ன குன்னத்துார் பழத்தோட்டம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் செனறார் அப்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் 2 வாலிபர்கள் சுஜாதாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றனர். இதுகுறித்து சுஜாதா ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் போரில் விசாரணை நடத்தி போலீசார் சின்ன குன்னத்துாரை சேர்ந்த சூர்யா(21) வெற்றிவேல், 20, ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.