காங்கேயத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம்

காங்கேயத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம் செயற்பொறியாளர் எஸ்.விமலாதேவி அறிவிப்பு;

Update: 2025-06-30 13:26 GMT
காங்கேயத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம் காங்கேயத்தில் மின்குறைதீர் கூட்டம் புதன்கிழமை (ஜூலை 2) நடைபெறவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய காங்கேயம் செயற்பொறியாளர் எஸ்.விமலாதேவி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: காங்கேயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை அன்று நடைபெறும். அதன்படி ஜூலை-2025 மாதத்துக்கான குறைதீர் கூட்டம், காங்கேயம் நகரப் பேருந்து நிலையம் அருகே, சென்னிமலை சாலையிலுள்ள மின்வாரிய அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில், புதன்கிழமை (ஜூலை 2) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு, தங்களின் குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி பெறலாம், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News