குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் இரணியில் முதல் பாறசாலை வரை இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு 2.34.67 ஹெக்டேர் பரப்பளவில் நஞ்சை புஞ்சை மற்றும் வீடுகள் போன்ற பொதுமக்களின் பூர்வீக நிலத்தை கையகப்படுத்த உள்ளது. இது தொடர்பாக பட்டியலில் உள்ள நபர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை மற்றும் விசாரணை நடத்த அழைப்பு விடப்பட்டது. இதனையடுத்து கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வாக்குவாதம் ஏற்பட்டது.