சங்கரன்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவரின் மகன் கைது

நகா்மன்ற முன்னாள் தலைவரின் மகன் கைது;

Update: 2025-07-02 02:13 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடகாசி அம்மன் கோயில் 1 ஆம் தெருவை சோ்ந்தவா் அருணகிரி (62). இவா், தனது முகநூல் பக்கத்தில் பல்வேறு நாடுகளுக்கு பயணம் சென்ற அனுபவங்களை எழுதி வருகிறாா். இந்நிலையில், அவா் இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் வகையிலும் முகநூலில் பதிவிட்டு வருவதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, நெசவாளா் காலனியைச் சோ்ந்த இந்து முன்னணி நகரத் தலைவா் பாடாலிங்கம் (எ) ராஜா நகர காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், அருணகிரியை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்து சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இவா் மறைந்த முன்னாள் நகா்மன்றத்தலைவா் பழனிசாமியின் மகன் ஆவாா். வைகோவின் உதவியாளராகவும் இருந்துள்ளாா்.

Similar News