ஓசூரில் தங்கி இருந்த நான்கு வங்கதேசத்தினர் கைது.
ஓசூரில் தங்கி இருந்த நான்கு வங்கதேசத்தினர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி ஆவலப்பள்ளி தனியார் குடியிருப்பில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த பஷார் முல்லா (46) மற்றும் அவரது குடும்பத்தினர் என நான்கு பேர் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளார். இதுகுறித்து ஒசூர் ஏ.எஸ்.பி.அணில் அக்ஷய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஒசூர் போலீசார்.பஷார் முல்லா, அவரது மனைவி ரத்னா பேகம், மகன் அலி ஜாட் முல்லா மற்றும் உறவினர் ஜூமா காத்தம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.