புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் அடுத்த பெரம்பூரை சேர்ந்தவர் சித்ரா (45). இவர் பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் பைக்கை ஓட்டி வந்த அபினேஷ் (22) மோதியதில் சித்ராவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரில் உடையாளிப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.