விவேகானந்தா கேந்திராவில் அன்ன பூஜை

கன்னியாகுமரி;

Update: 2025-07-05 04:30 GMT
சுவாமி விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி சமாதி அடைந்தார். இதனை முன்னிட்டு கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் சபாக்கிரக அரங்கத்தில் அன்ன பூஜை நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 10 மணிக்கு குமரி, நெல்லை,தூத்துக்குடி, சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்து விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட தொண்டர்களால் நன்கொடையாக பெறப்பட்ட அரிசியை மலைபோல் குவித்து வைத்து அதன் மேல் அன்னபூரணி சிலையை வைத்து மலர்களால் அலங்கரித்து அன்ன பூஜை நடைபெற்றது. மேலும் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர்,அன்னை சாரதா தேவி மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய ஏக்நாத் ராணடே ஆகியோரின் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கபட்டு பூஜை செய்யப்பட்டது. உருவப்படங்களுக்கு விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பிரார்த்தனையுடன் அன்ன பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

Similar News