உத்தனப்பள்ளியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

உத்தனப்பள்ளியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை;

Update: 2025-07-05 12:14 GMT
உத்தனப்பள்ளியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை/ சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் ஆகாஷ் (18) இவர் உத்தனப்பள்ளியில் தங்கி அங்கு உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. பயோடெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பி.எஸ்சி. பயோடெக் படிக்க விருப்பம் இல்லை என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் கட்டாயம் படிக்க சொல்லி வற்புறுத்திய தாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ஆகாஷ் வீட்டில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த உத்தனப்பள்ளி போலீசார் விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News