தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த நபரை மீட்ட காவல்துறையினர்.
குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளரான மருதமுத்து இன்று 07.07.2025 மேற்படி நபரை மீட்டு பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.;
பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த நபரை பாதுகாப்பாக மீட்டு கருணை இல்லத்தில் சேர்த்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கபட்டு சுற்றித் திரிந்த இஃபான் 26/25 என்ற நபரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளரான மருதமுத்து இன்று 07.07.2025 மேற்படி நபரை மீட்டு பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.