ஓசூர் அருகே வடமாநில ஓட்டுநர் திடீர் உயிரிழப்பு.

ஓசூர் அருகே வடமாநில ஓட்டுநர் திடீர் உயிரிழப்பு.;

Update: 2025-07-08 01:44 GMT
பீகார் மாநிலம் முசாபூர் மாவட்டம் துவாரிகாபூரை சேர்ந்தவர் வினோத்குமார் தாகூர் (46) இவர் ஒசூர் சிப்காட் சின்ன எலசகிரியில் தங்கி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். சம் பவம் அன்று அவர் ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப்பள்ளியில் சாலை ஓரத்தில் உள்ள கடையில் சாப்பிட்ட போது அவர் திடீரென மயங்கி கீழோ விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற பொது அவர் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News