பேட்டரி திருடிய மூன்று பேர் கைது

காஞ்சிகோவிலில் டிராக்டரில் பேட்டரி திருட்டு! 3 பேர் கைது!!;

Update: 2025-07-11 05:41 GMT
பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த டிராக்டரில் இருந்து பேட்டரியை திருடி சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில், சின்னியம்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மகன் பழனிசாமி (51). விவசாயியான இவர், சொந்தமாக டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டிராக்டரின் பேட்டரியை அடையாளம் தெரியாத 3 நபர்கள் திருடி சென்று விட்டதாக, காஞ்சிகோவில் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காஞ்சிகோவில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். காஞ்சிக்கோவில், சித்தோடு ரோடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக பைக்கில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும், பைக்கை திருப்பி செல்ல முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்த போலீஸார் பைக்கின் முன் பகுதியில் பேட்டரி ஒன்று இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்து, அவர்களை மேலும் விசாரித்த போது, பழனிசாமியின் டிராக்டரில் இருந்த பேட்டரியை திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் மேலும் மேற்கொண்ட விசாரணையில், சித்தோடு அருகே உள்ள பேரோடு, ஆயமரத்து மேடு, ஜே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்த, மாணிக்கம் மகன் மணிகண்டன் (20), முனுசாமி மகன் தென்னரசு (24), சேலம் மாவட்டம், மேட்டூர், கொளத்தூர் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் பூபதி (26) என்பதும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்த பேட்டரியை கைப்பற்றிய போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது;செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

Similar News