ஆன்லைன் விளையாட்டு விபரீதம். இரயில் முன் பாய்ந்து தற்கொலை

மதுரை உசிலம்பட்டி அருகே ஆன்லைன் விளையாட்டில் அனைத்து இழந்தவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2025-07-14 14:01 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டியைச் சேர்ந்த சின்னராஜா (35) என்பவர் தனியார் டிரைவிங் பயிற்சி நிறுவன பயிற்சியாளராக இருந்தார். இவருக்கு ரூபாபதி என்ற மனைவி, 7 வயதில் ஒரு மகன், 5 வயதில் மகள் உள்ளனர். இவர் பலரிடம் கடன் வாங்கி ஆன் லைன் விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் திரும்பக் கேட்டதால் வீட்டில் இருந்து வெளியேறினார். அவரது மனைவி உசிலம்பட்டி காவல் நிலையத்தில் தனது கணவரை 2 நாட்களாக காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஜூலை 12ல் இரவு 7:00 மணிக்கு சில்லாம்பட்டி பகுதியில் போடிநாயக்கனுார் - மதுரை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News