திருமணமான பெண் மாயம். தந்தை புகார்.

மதுரை சோழவந்தான் அருகே திருமணமான பெண் மாயமென புகார் அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-07-14 14:07 GMT
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள நரியம்பட்டியில் வசிக்கும் ஜெயபாண்டியின் மனைவி பவித்ரா( 24) என்பவர் கடந்த 10ம் தேதி வத்தலகுண்டிற்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது தந்தை முத்தையா விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

Similar News