உழவரைத்தேடி' திட்ட முகாம்

பரமத்தி வேலூரில் உழவரைத்தேடி' திட்ட முகாம்.;

Update: 2025-07-14 14:31 GMT
பரமத்தி வேலூர், ஜூலை 14: பரமத்தி வட்டாரத்தில் உழவரைத்தேடி வேளாண்மை உழ வர் நலத்துறை திட்ட முகாம் வீரணம்பாளையம் கிராமத் தில் அண்மையில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக் குநர் (மாநில திட்டம்) கவிதா முகாமுக்கு தலைமை வகித்து, திட்டம் செயல்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் திட்டத்தின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுதா வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இதர திட்டங்கள் குறித்து கூறினார். இம்முகாமில் வேளாண் சகோதர துறைகளின் வட்டார அலுவலர்கள் கலந்துகொண்டு தங்களின் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளிடையே எடுத் துக்கூறினர். பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலர் கலைச்செல்வன் நன்றி கூறினார். முகாமுக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பிரபு செய்திருந்தார்.

Similar News