சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை மறுப்பு.
மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்க சிபிஐ நியமிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.;
மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பில் ஏற்பட்ட ஊழல் காரணமாக மதுரை மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கை, சிபிஐக்கு மாற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. இப்பிரச்சனை குறித்து மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் 7 பேரை பதவி விலக வைத்திருக்கும் முதல்வரின் நடவடிக்கையால், இவ்வழக்கில் விசாரணை நேர்மையாக நடக்கும் என நம்புகிறோம் என தெரிவித்த நீதிபதிகள் தென்மண்டல ஐ.ஜி, மதுரை ஆணையர் இணைந்து மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு அமைக்கவும் நீதிபதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த சிறப்பு விசாரணைக்குழு அதன் அறிக்கையை அவ்வப்போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.