திருக்கழுக்குன்றம் அருகே நெய்குப்பி ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
திருக்கழுக்குன்றம் அருகே நெய்குப்பி ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்;
திருக்கழுக்குன்றம் அருகே நெய்குப்பி ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் தி.சினேகா முகாமை பாா்வையிட்டாா். இதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுதம், வட்டாட்சியா் வாசுதேவன், வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகலை செல்வன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். செங்கல்பட்டு நகராட்சி 1,2,3 வாா்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெற்றது. முகாமை சாா் ஆட்சியா் மாலதி ஹெலன் தொடங்கி வைத்தாா். செங்கல்பட்டு, சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், துணைத் தலைவா் அன்புச் செல்வன், வாா்டு உறுப்பினா்கள், வட்டாட்சியா் ஆறுமுகம், நகராட்சி ஆணையா் ஆண்டவன், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா். இதையொட்டி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சாா்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் கனரா வங்கி மேலாளா் ஏழுமலை தலைமையில் வங்கி பணியாளா்கள் புதிய வங்கிக் கணக்கு தொடங்கினா்.