மன்னர் கல்லூரி பட்டமளிப்பு விழா
மதுரை மன்னர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;
மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை அருகே உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இன்று 30 வது பட்டமளிப்பு விழா லெட்சுமியம்மாள் வீரப்ப நாயக்கர் கலையரங்கத்தில் இன்று (ஜூலை.19) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டார். தொடர்ந்து எம்பி கனிமொழி மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மாணவர்களாக இந்த உலகத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். புதிய தருணங்கள் உருவாக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். புதிய அனுபவங்களை உங்களிடம் பகிர்வதற்காக பல சவால்கள் உங்கள் பாதையில் வரும். இந்த கல்லூரி அந்த சவால்களை சமாளிக்க உங்களை தயார்படுத்தும் என்றார்.