வடலூர்: அய்யன் ஏரியில் நகர்மன்ற தலைவர் ஆய்வு
வடலூர் அய்யன் ஏரியில் நகர்மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.;
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அய்யன் ஏரியில் நடைபெற்று வரும் நடைபாதை அமைக்கும் பணியை வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.