மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் சார்பில் இலவச நோட்டுகள் வழங்கும் விழா

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாற்றுத்திறனுடையோர் வாரிசுகளுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா குமாரபாளையத்தில் நடந்தது.;

Update: 2025-07-21 08:53 GMT
நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாற்றுத்திறனுடையோர் வாரிசுகளுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா, மற்றும் மாற்றுத்திறனுடையோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக ஆடிட்டரும், அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலருமான குமரேசன் பங்கேற்று, குழந்தைகளுக்கு இலவச நோட்டுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி வாழ்த்தி பேசினார். இதில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Similar News