மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர்

மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர்;

Update: 2025-07-22 07:11 GMT
மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர் செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்த ரகுபதி என்பவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் நல்ல பாம்பு இருந்ததை கண்டு ரகுபதி மதுராந்தகம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினர் இருசக்கர வாகனத்தில் இருந்த நல்ல பாம்பினை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டுசென்றனர். மதுராந்தகம் அருகே இரவு நேரத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தில் நல்ல பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News