அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட மௌன ஊர்வலம்
திண்டுக்கல்லில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட மௌன ஊர்வலம்;
கேரளா முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவை முன்னிட்டு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட மௌன ஊர்வலம் பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கூண்டு வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளா முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு அனைத்து கட்சியினரும் மலர் தூவி மரியாதை செய்து இரங்கல் உரையாற்றினர்.