குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டெருமைகள்

குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டெருமைகள்... வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை;

Update: 2025-07-23 06:48 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அண்ணா நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Similar News