வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்

ரெட்டியார்சத்திரம் அருகே மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்;

Update: 2025-07-23 07:51 GMT
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே அழகுபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு கட்டிடம் கட்டித் தர பலமுறை கோரிக்கை விடுத்தும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று முதல் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்றும் இந்தப் பிரச்சனையில் உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News