கோவை சூலூரில் லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு – சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
சிமெண்ட் லாரி ஏறி மூதாட்டி பலி.;
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில், மார்க்கெட் ரோடில் கடைக்கு சென்றுகொண்டிருந்த கமலா (வயது 52) என்ற பெண்மணி மீது, திடீரென இயக்கப்பட்ட சிமெண்ட் லாரி மோதி, சக்கரம் ஏறி இறங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். லாரி முன்புறம் நடந்து சென்ற கமலாவை கவனிக்காமல் லாரியை இயக்கிய டிரைவர் மாணிக்கம் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியான நிலையில், உள்ளூர் மக்களிடம் பெரும் சோகமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.