குடிசைப் பகுதி மக்களின் அரணாக தீக்கதிர் நாளிதழ்.ஆர்வத்துடன் தீர்க்கதிர் நாளிதழுக்கு சந்தா தொகையை செலுத்திய குடிசை வாழ் மக்கள் பிரமித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்
தா பழூரில் தீக்கதிர் சந்தா சேகரிப்பின் போது குடிசை வாழ் மக்கள் ஆர்வத்துடன் 10-க்கும் மேற்பட்ட சந்தாக்களை தாமாக முன்வந்து வழங்கியது கட்சித் தலைவர்களையும், கட்சி தோழர்களையும் பிரம்மிக்க வைத்துள்ளது.;
அரியலூர், ஜூலை.25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கடந்த பத்தாம் தேதி தொடங்கி இம்மாதம் 20ஆம் தேதி வரை தீக்கதிர் நாளிதழுக்கான சிறப்பு சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. அதையொட்டி தீக்கதிர் திருச்சி பதிப்பு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் கட்சி தோழமையுடனும், பொதுமக்களிடமும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தா.பழூர் ஒன்றியத்தில் குடிசை வாழ் பகுதி மக்களிடம் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்புகாக கட்சியின் தமிழ்நாடு மாநில குழு உறுப்பினரும், திருச்சி பதிப்பு தீக்கதிர் பொறுப்பாளருமான ஐ வி நாகராஜ் அவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், தா.பழூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.அம்பிகா உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் சந்தா சேர்ப்பு இயக்கத்திற்காக சென்றபோது குடிசை வாழ் பகுதி மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் உணர்வுபூர்வமாக தீக்கதிர் நாளிதழுக்கு சந்தா வழங்கினர். ஏழை எளிய குடிசை வாழ் பகுதி மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள தீக்கதிர் பத்திரிக்கைக்கு நாங்கள் சந்தா கொடுத்து தீக்கதிர் நாளிதழை பெற்றுக் கொள்வதில் பெருமை அடைவதாகவும், அவர்களுடைய உணர்வும், ஊக்கமும் தீக்கதிர் நாளிதழ் சேகரிப்பு சென்றவர்களுக்கு உணர்ச்சி பூர்வமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் அந்தப் பகுதியில் 10 -க்கும் மேற்பட்ட குடிசை வாழ் பகுதி மக்கள் தீக்கதிர் நாளிதழுக்கான சந்தாவினை தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினரும் திருச்சி பதிப்பு தீக்கதிர் பொறுப்பாளருமான ஐ.வி.நாகராஜன் அவர்களிடம் வழங்கினர். சந்தா சேர்ப்பில் இந்த அளவுக்கு ஒரு உணர்வுபூர்வமாக குடிசை பகுதி வாழ் மக்கள் தங்களது குடிசைகளில் இருந்தபடியே வெளியே வந்து ஆர்வமாக சந்தாவிற்கான அந்தத் தொகையை வழங்கிய போது கட்சி தலைவர்களுக்கும், தோழர்களுக்கும் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பகுதி மக்கள் கூறும்போது :- 2024 இல் வீடு இல்லாத எங்களுக்கு மனை கேட்டு போராடி தரிசாக கிடந்த கோயில் இடத்தில் எங்களை குடியிருப்பதற்கு குடிசை அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முயற்சி எடுத்து அங்கே குடிசை அமைப்பதற்கு ஏற்பாடு செய்த நிலையில் அப்போது அதை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மற்றும் காவல் துறையை கண்டித்து எங்களுடைய குமுறல்களையும், எங்களுடைய வாழ்வாதாரத்திற்கான ஆதாரத்தையும் உருவாக்கி தருவதற்காக போராடியதுடன் தீக்கதிர் பத்திரிக்கை தான் அந்த செய்தியினை வெளிக்கொண்டு வந்தது. எனவே அந்த தீக்கதிர் நாளிதழுக்கு சந்தா கொடுப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், இப்போதும் பயனாளிகளாக கோயில் இடங்களிலே குடிசை அமைத்து வாழ்கிற எங்களுக்கு அவ்வப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் பாதுகாத்து எங்களுக்கு அரணாக உள்ளது.எனவே நாங்கள் எப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், தீக்கதிர் நாளிதழையும் மறக்க மாட்டோம் தொடர்ந்து அதற்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் செயல்படுவோம் என்று அவர்கள் மன்க்குமுறல்களுடன் தெரிவித்தனர்.