அரியலூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர்.
அரியலூரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
அரியலூர், ஜூலை 26- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், 16 ஆண்டுகால ஊதிய முரண்பாடுகளை களைத்திட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி , 2009} க்கு பிறகு நியமிக்கப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க மாவட்டச் செயலர் அந்தோணி ஆனந்த் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் நடராசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், ரங்கநாதன், செல்வகுமார் ,மாவட்ட துணைத் தலைவர் சுஜாதா, துணைச் செயலர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை விளக்கவுரையாற்றினர். நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு முழக்கமிட்டனர். :