வைகுண்ட சாமி கோவிலில் திரண்ட அய்யாவழி பக்தர்கள்

கன்னியாகுமரி;

Update: 2025-07-28 03:25 GMT
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதி உள்ளது. ஆடிமாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை 4 மணிக்கு முட்டப்பதி அய்யா வைகுண்ட சாமி பதியில் திருநடை திறக்கப்பட்டு அய்யாவுக்கு பணிவிடைகள் நடந்தன. இதில் கலந்துகொண்ட அய்யா வழி பக்தர்களுக்கு இனிப்பு, தேங்காய், பழம், திருநாமம், வெற்றிலை, பாக்குமற்றும் பழங்கள் உள்ளிட்டவை இனிமமாக வழங்கப்பட்டது. மாலையில் அய்யாவுக்கு பணிவிடை, வாகன பவனி அன்னதர்மம் போன்றவை நடைபெறுகிறது. இந்த சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்பதற்காக முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் அய்யாவழி பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே முட்டப்பதியில் குவிந்தனர். அவர்கள் முட்டப்பதி தீர்த்தக்கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யா வைகுண்டசாமியை வணங்கி வழிபட்டனர்.

Similar News