குமரி மாவட்டம் நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட கண்டன்விளையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நுள்ளிவிளை ஊராட்சி சார்பில் எஸ்.பி.எம்.ஆர்.எம். திட்டத்தின் கீழ் குடிநீர் தொட்டியின் கீழ்பக்கம் உள்ள காலி இடத்தில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டு இசேவை மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் இத்திட்டம் கைவிடப்பட்டதால் புதியதாக கட்டப்பட்ட கட்டிடம் தற்போது பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் மக்கள் பணம் விரயமாகியுள்ளது. பொதுமக்கள் இந்த கட்டிடத்தின் முன் பகுதியில் அமர்ந்து பத்திரிகைகள் படித்து வருகின்றனர். எனவே பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கும் கட்டிடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர். இதுதொடர்பாக அந்த பகுதி சமூக பொது நல இயக்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்